×

திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது

 

திருவேங்கடம், ஏப்.29: திருவேங்கடம் அருகே வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 வியாபாரிகளை கைது செய்தனர். திருவேங்கடம் அருகே சின்னக்காலாம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (58). மளிகை கடை நடத்தி வருகிறார். அதே ஊர் வடக்கு காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் (40) இரு சக்கர வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று மளிகை பொருட்கள் விற்று வருகிறார். இவர்கள் இருவரும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக திருவேங்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராஜசேகரின் மளிகை கடை மற்றும் வீட்டிலும், சுப்புராஜ் வீட்டிலும் திருவேங்கடம் எஸ்ஐ முத்துக்குமரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ராஜசேகரின் மளிகை கடை மற்றும் வீட்டில் 3 மூடை புகையிலை பொருட்களையும், சுப்புராஜன் வீட்டில் ஒன்றரை மூட்டை புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 60 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.21 ஆயிரம் ஆகும். இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த எஸ்ஐ முத்துக்குமரன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

The post திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvenkadam ,Rajasekar ,Chinnakalampatti Melatheru ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் மினி பேருந்து மோதி பரோட்டா மாஸ்டர் பரிதாப பலி